குடாநாட்டில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் உட்பட அனைவரும் அழுத்தத்தின் மத்தியிலேயே பணியாற்றி வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டில் பெரும்பாலானவர்கள் அழுத்தத்தின் மத்தியிலேயே பணியாற்றி வருகின்றனர். இலங்கையில் மாத்திரமன்றி உலகில் பெரும்பாலான நாடுகளில் ஆளும் மத்திய அரசாங்கத்தின் கட்டளைப்படியே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளிலுள்ள சிறுபான்மை இனத்தவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்
இன்று வியாழக்கிழமை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அரசாங்க அதிபர் இவ்வாறு கூறினார்.
யாழ் குடாநாட்டில் காணப்படும் மோசமான நிலையிலும் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் நோக்கில் பணியாற்றிவருவது பாராட்டத்தக்கது எனவும் அவர் கூறினார்.
மனித உரிமைகள் பற்றிய விளிப்புணர்வு பாடசாலைகள் மட்டத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டு அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக