ஞாயிறு, 21 டிசம்பர், 2008

சிறிலங்கா படையினரின் இழப்புக்களை குறைப்பது எவ்வாறு?: பாதுகாப்புச் சபையில் ஆராய்வு


கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படைத்தரப்பு இந்த வாரம் சந்தித்த பாரிய இழப்புக்களை தொடர்ந்து படையினரின் இழப்புக்களை குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பாக பாதுகாப்புச் சபை கூடி ஆராய்ந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
இந்த வார தொடக்கத்தில் கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகள் உட்பட பல களமுனைகளில் இராணுவம் சம நேரத்தில் மேற்கொண்ட நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பு அதிக இழப்புக்களை சந்தித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கொழும்பில் கடந்த புதன்கிழமை அவசரமாக பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது.
முப்படை தளபதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்குபற்றிய இந்த மாநாட்டில் களமுனைகளில் படையினரின் இழப்புக்களை குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பாக மிகவும் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.
அதனை மேற்கொள்வதற்கு இராணுவ நடவடிக்கைகளின் இணைந்த நடவடிக்கை அவசியம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: