திங்கள், 22 டிசம்பர், 2008
புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து இந்தியப் பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த புதிய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் அமெரிக்காவின் எவ்.பி.ஐ. புலனாய்வு நிறுவனத்திற்கு இணையான அதிகாரங்களை உடையதெனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை 180 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளக் கூடிய அதிகாரம் இந்திய தேசியப் புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக