வியாழன், 18 டிசம்பர், 2008

மீண்டும் சிறிலங்கா படையினரின் தாக்குதல் முறியடிப்பு: புதுமுறிப்பில் 12 உடலங்களும் படையப் பொருட்களும் மீட்பு



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இன்னுமொரு முன்நகர்வு முயற்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் 12 உடலங்களும் பெருமளவு படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

புதுமுறிப்பு பகுதியில் இன்று புதன்கிழமை காலை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இதன் போது படையினரின் 12 உடலங்களும் பெருமளவு படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆயுத விவரம் வருமாறு:

ஆர்.பி.டி எல்.எம்.ஜி - 02

பி. கே எல்.எம்.ஜி - 02

ஆர். பி. ஜி - 07

பி. ஏ 35 - 01

சி. டி 70 - 01

ஏகே ரவைகள் - 37,000

ஏகே ரவை இணைப்பிகள் - 1,230

பிகே இணைப்பிகளுடன் ரவைகளுடன் - 12,000

ஆர்.பி.ஜி எறிகணைகள் - 49

ஆர்.பி.ஜி புறப்ளர்கள் - 37

கைக்;குண்டுகள் - 132

மற்றும் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மற்றும் கிளாலி களங்களில் ஐந்து முனைகளில் முன்னேறிய படையினரை விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நாள் மோதல்களில் மொத்தமாக சிறிலங்கா படைத்தரப்பில் 165 போ் கொல்லப்பட்டுள்ளதுடன் 375 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் 38 உடலங்களையும் பெருமளவு படையப் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: