விமான நிலையத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் வான்கள் வெளியேறும் பகுதிக்கு அனுமதிக்கப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பிரதான நுழை வாயில் வரை மட்டுமே வாகனங்கள் மூலம் வர முடியும் எனவும், பின்னர் விமான நிலையத்தினால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதான நுழைவாயிலுக்கு வெளியே வாகனத் தரிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு பயணியுடனும் இருவர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்படுகிறது. மிகவும் அவசரத் தேவையுடைய நோயாளிகளது வாகனங்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக