முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்றுள்ள தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை காலை 10.15 மணிக்கு, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். | |
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய, அந்நாட்டை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் குழு வலியுறுத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இதே கருத்தை தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு வலியுறுத்த உள்ளது. பிரணாப்பை இலங்கை அனுப்ப மத்திய அரசு முடிவு மேலும் தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் இலங்கை தமிழர்களுக்கான நிவாரண பொருட்கள், இலங்கை தமிழர்களுக்கு உரிய முறையில் கிடைக்க புது முயற்சிகளை எடுக்கவும் பிரதமரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று, அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. .
| |
|
வியாழன், 4 டிசம்பர், 2008
பிரதமரை சந்தித்தது தமிழக அனைத்துக் கட்சிக்குழு: பிரணாப்பை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக