திங்கள், 22 டிசம்பர், 2008

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உயிருக்கு போராடி வருகிறார்


சர்வதேச பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், ரத்தக்கசிவு நோய் காரணமாக உயிருக்குப் போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், மூச்சுக்குழாய் பாதிப்பு மற்றும் ரத்தக்கசிவு நோய் காரணமாக, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மருந்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், தனது இளமைக் காலத்தில் மைக்கேல் ஜாக்சன், பலதடவைகள் முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக, அவருக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதனால், மூச்சுக்குழாய் கோளாறு, ரத்தக்கசிவு போன்ற நோய்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாகவும், தற்போது, ஜாக்சன் பேசும் சக்தியை இழந்துவிட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அவரது வலது கண்ணில் 95 சதவீதம் பார்வை போய்விட்டதாகவும், அவரைக் காப்பாற்ற போராடி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் கூறுகையில், ஜாக்சன் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறியுள்ளார். பாப் இசை உலகில், தனக்கென்று தனி இடத்தைப் பிடித்த ஜாக்சன் உயிருக்கு போராடி வரும் செய்தி, அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 கருத்து:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

திறமையையும்; செல்வத்தையும் "குரங்கின் கைப் பூமாலையாக்கிய " இவரை என்னென்பது..