திங்கள், 29 டிசம்பர், 2008

சிறிலங்கா படையினரின் 17 உடலங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு



முல்லைத்தீவு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட படையினரின் 17 உடலங்களும் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் இக்கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகப் பணிப்பாளர் மு.பாவரசனினால் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி யூலியனிடம் படையினரின் 17 உடலங்களும் கையளிக்கப்பட்டன.

முல்லைத்தீவு நோக்கி கடந்த சனிக்கிழமை (27.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன் படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிககளால் கைப்பற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை: