பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் வரையில் ஆயுதங்களை களைய போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். |
பிரித்தானியாவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருக்கும் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குட்லேனை திருகோணமலையில் இன்று சந்தித்து உரையாடிய போதே முதலமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளிடம் இருந்து தமது உறுப்பினர்களை பாதுகாத்து கொள்வதற்காக மாத்திரமே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சாரந்தவர்கள் ஆயுதங்களை பயன்படுத்துவார்கள் என முதலமைச்சர் இதன் போது தெரிவித்தார். இதேவேளை கிழக்கு பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் சீரடைந்ததன் பின்னரே ஆயுதங்களை களைய போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 20 வருடங்களுக்கு பின்னர் ஜனநாயகத்தின் அதிகாரம் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய வெற்றி எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். |
புதன், 10 டிசம்பர், 2008
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படும் வரையில் ஆயுதங்கள் களையப்பட மாட்டாது - பிள்ளையான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக