முல்லைத்தீவு அளம்பில் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிய சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 65 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 120 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. |
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: அளம்மில் பகுதியில் இருந்து சிறிலங்கா படையினர் முல்லைத்தீவை நோக்கி நேற்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடன் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி பிற்பகல் 1:00 மணியளவில் படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர். இதில் சிறிலங்கா படையினர் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 16 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:
உள்ளிட்ட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் சிறிலங்கா படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
|
திங்கள், 29 டிசம்பர், 2008
முல்லைத்தீவை நோக்கிய படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 65 படையினர் பலி; 120 பேர் காயம்; 17 உடலங்கள் மீட்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக