வெள்ளி, 19 டிசம்பர், 2008

வன்னி களமுனைப் படங்களால் சிறீலங்கா மக்கள் மத்தியில் பெரும் குழப்பம்

கிளிநொச்சி சமரின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள படங்கள் மற்றும் செய்திகள் சிறீலங்காவின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சிறீலங்கா படையினர் கிளிநொச்சி நோக்கி 5 கிலோமீற்றர் முன்னேறியுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 120 போராளிகள் உயிரிழந்தும் 250 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்காவின் ஊடகங்கள் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தன.

ஆனால் விடுதலைப்புலிகள் வெளியிட்ட உடலங்கள், மற்றும் சிறுவர் படையணி பற்றிய படங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை. கடந்த வாரம் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி வெளியிட்ட கருத்தும். சிறீலங்கா மக்கள் மத்தியில் கடும் அதிருப்பதியையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளில் 12,500 போராளிகளை தாம் கொன்றுள்ளதாகவும். இன்னும் 1.500 பேர் மட்டுமே போராடும் வலுவுடன் உள்ளதாகவும் கரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

அது பற்றி எமக்கு கருத்து தெரிவித்த சிறீலங்காவின் பிரபல அரசியல் கட்சியின் அங்கத்தவர் ஒருவர், சரத் பொன்சேகாவின் கருத்துபடி நேற்றைய இழப்புகளின் பின்னர் விடுதலைப் புலிகளில் வெறும் 1000 பேரே இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாகர்கோவில் கிளாலி மற்றும் பூநகரி முதல் மணலாறுவரை பல கிலோ மீற்றருக்கு மேல் இருக்கும் இடத்தினைக் காப்பதற்குக்கூட விடுதலைப் புலிகளுக்கு பேராளிகள் போதாத நிலையில். எவ்வாறு அவர்கள் இவ்வாறான தாக்குதலை நடத்த முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பகுத்தறிவு அற்ற பேரினவாதச் சிந்தனையுடன் சிங்கள மக்களை வைத்திருப்பதில் சிறீலங்கா அரசு வெற்றிபெற்று வருவதாகவும். அவர்களது பரப்புரை சிங்கள மக்கள் மத்தியில் வெற்றிபெறுகின்ற போதிலும். மேற்குலகில் தோல்விகண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி : இன்போதமிழ்

கருத்துகள் இல்லை: