ஞாயிறு, 21 டிசம்பர், 2008

வன்னியில் 60 படையினர் பலி, 150 பேர் படுகாயம் - 15 உடலங்களும் ஆயுதங்களும் புலிகள் வசம்


வன்னிக் களமுனைகளில் முன்னேறிய சிறிலங்காப் படையினருக்கு எதிராக இன்று விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 150ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முறுகண்டி - இருணைமடுப் பகுதிகளில் முன்னேறி நிலைகொண்டிருந்த படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் படையினருக்கு மீண்டும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது 15 படையினரின் உடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அத்துடன் படையினர் முன்னைய நிலைகளில் இருந்து 2 கிலோ மீற்றர் பின் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
படையினரின் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவாக சிறீலங்கா வான் படையினரும், ஆட்டிலெறிப் படையினரும் ஒத்துழைப்புக்களை வழங்கியிரந்தபோதும் படையினர் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளதாகவும், கடந்த இரண்டு வாரங்களுக்குள் படையினருக்கு ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரும் இழப்பு இதுவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: