வெள்ளி, 19 டிசம்பர், 2008

விழுப்புண்ணடைந்த போராளிகளுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கல்



சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிட்டு எதிரிக்கு இழப்புகளைக் கொடுத்துவரும் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கண்டாவளைக் கோட்ட ஆசிரியர் சமூகம், தருமபுரம் வர்த்தகர் சங்கம் கோட்ட போரெழுச்சிக்குழு கண்டாவளை புளியம்பொக்கணை கிராமங்களின் மக்கள் கூட்டுறவுப் பகுதியினர் ஆகியோர் இணைந்து இவ் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இவர்கள் வன்னிமேற்கு, வடபோர்முனை ஆகியவற்றில் களப்பணிலீடுபடும் மக்களுக்குமான உலருணவுப்பொருட்களை வழங்கினர் இந்நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சி.சீராளனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை: