வெள்ளி, 19 டிசம்பர், 2008

படையினரின் 25 உடலங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஐ.சி.ஆர்.சியிடம் கையளிப்பு


கிளிநொச்சியில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் சிறிலங்கா படையினரின் 25 உடலங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கையளிக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை புதுக்குடியிருப்பில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வன்னிக்கான வதிவிட பிரதிநிதி யூலியனிடம் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பரிதியினால் கையளிக்கப்பட்டது.

இன்னுமொரு படையினரின் உடலங்கள் தொகுதி நாளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இளம்பரிதி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: