முல்லைத்தீவில் உள்ள மாணவர் விடுதி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அந்த விடுதி சேதமடைந்துள்ளது. |
மணலாறில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் மாலை வரை முல்லைத்தீவு முள்ளியவளை மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடரான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். முல்லைத்தீவு பங்குத்தந்தையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதியே சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் சேதமடைந்துளது. இதேவேளை, முள்ளியவளையின் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்தும் தொடரான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர். முள்ளியவளை பகுதிக்குட்பட்ட மாமூலை, கணுக்கேணி, குமாரபுரம் பூதன்வயல் ஆகிய மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று தொடராக சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் மக்களின் பயன்தரு மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் கால்நடைகள் பல இறந்துள்ளன. |
புதன், 10 டிசம்பர், 2008
முல்லைத்தீவில் மாணவர் விடுதி மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக