வியாழன், 11 டிசம்பர், 2008

முறிகண்டி வடமேற்குப் பகுதியிலும் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி; 40 பேர் காயம்



கிளிநொச்சியின் தென் எல்லைப்பகுதியான முறிகண்டிக்கு வடமேற்கு பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முறிகண்டிக்கு வடமேற்கில் உள்ள புலிக்குளம் பகுதியில் இன்று புதன்கிழமை 9:00 மணிக்கு செறிவான எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர முறியடிப்புத் தாக்குதல் இன்று மாலை 6:00 மணி வரை நீடித்தது.

இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: