செவ்வாய், 30 செப்டம்பர், 2008
ஜோத்பூர் : கோயில் நெரிசலில் சிக்கி 72 பேர் பலி!
சாமுண்டா கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 72 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களின் உடல்கள் மகாத்மா காந்தி மருத்துவமனைக்கும், மதுராதாஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக, மண்டல காவல்துறை ஆணையர் கிரன் சோனி குப்தா தெரிவித்தார்.
படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜோத்பூரிலுள்ள சாமூண்டா தேவி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதைக் காணவரும் பக்தர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.
இக்கோவிலில் இன்று காலை நிகழ்ந்த திடீர் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவராத நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்புகள் மிகுந்த ரமலான்
மற்ற மாதங்களில் செய்யும் அமல்களைவிட இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது. நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது. அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான்.
ரமலான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜீவன்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ‘’நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே நிறுத்திக் கொள்ளுங்கள்!’’ என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : திர்மிதீ, இப்னுமாஜா
நோன்பின் கடமைகள்
1. பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது.
|
3. பைத்தியக்காரர்கள், நன்மை-தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
4. சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
5. பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
6. கற்பமாக இருக்கும் பெண் அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
7. மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
8. 'தீ' மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது, பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.
நோன்பை முறிக்கும் செயல்கள்!
1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.
2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்கள் (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகள்) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.
5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.
சிறுபான்மை மக்களை உதாசீனப்படுத்தும் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு CPAகண்டனம்
கடந்த 23ம் திகதி கனடிய பத்திரிகையான தி நெசனல் போஸ்ட் பத்திரிகைக்கு இராணுவத் தளபதி அளித்த செவ்வி குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நாடு சிங்கள மக்களுக்கே உரித்தானது, சிறுபான்மை மக்கள் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.
எனினும், நாட்டின் உயர் பாதுகாப்புப் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் ஒர் படைத்தளபதி இவ்வாறான அரசியல் ரீதியான இனவாத கொள்கைகளை வெளியிடுவது கண்டிக்கப்பட வேண்டியதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இராணுவத் தளபதியின் குறித்த செவ்வி சிறுபான்மை மக்களை உதாசீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியின் இந்த பொறுப்பற்ற செயல் குறித்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான இனவாத கொள்கைகளின் மூலம் இன நல்லிணக்கத்திற்கு பாரிய குந்தகம் ஏற்படக் கூடும் என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றார்
சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனமொன்றினால் வழங்கப்படவிருந்த விருது வழங்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாதனைகளுக்காக அமைச்சர் தேவானந்தாவிற்கு இந்த விருது வழங்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அமைச்சர் திடீரென சுகவீனமுற்றதனால் விருது வழங்கும் நிகழ்வு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. |
இந்தியாவின் பாணியில் தடுப்பரண்களை அமைத்துள்ள புலிகள்:தரைமார்க்கமாக முன்னேற முடியாமலிருக்கும் இராணுவம்
விடுதலைப் புலிகள் வன்னிப் போர்முனைகளில் இந்திய இராணுவத்தின் பாணியில் ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களினால் இலங்கை இராணுவம் தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. |
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; விடுதலைப் புலிகள் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வந்தாலும், அவர்களின் இராணுவ உத்திகள் பெரும் வியப்பளிப்பவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நாட்டின் இராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும் சாதுரியமும் புத்திசாலித்தனமும் ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளது. இந்த நிலையில், புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள பாதுகாப்பு அரண்கள் குறித்த வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளன. அதில் என்ன ஆச்சரியம் என்றால், இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்திய இராணுவமும் கையாளுகிறது என்பதுதான். பாகிஸ்தானுடனான போரின்போதுதான் இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது. உண்மையில் இது பிரெஞ்சுப் பாணி தடுப்பரண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தடுப்பரண் மேற்கு மன்னார் கடலோரப் பகுதியில் உள்ள நாச்சிக்குடா முதல், கிழக்கில் உள்ள அக்கராயன்குளம் வரையிலும் நீண்டு காணப்படுகிறது. "ஸிக் ஸாக்' வடிவிலும் மொத்தம் 3 கட்டங்களைக் கொண்டதாகவும் இந்தத் தடுப்பரண் உள்ளது. முதலில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட தளம் வருகிறது. அடுத்து பெரும் பள்ளம் வரும். இதைத் தொடர்ந்து வருவது தாக்குதல் நடத்தும் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்கக்கூடிய பதுங்கு குழிகள். கண்ணிவெடிகளை இயக்குவதில் புலிகள் சாதுரியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பாதுகாப்பு அரண்களில் முதலில் வரும் கண்ணிவெடி பொறியிலிருந்து அவ்வளவு எளிதில் இராணுவத்தால் தப்ப முடியாதாம். ஒருவேளை அதற்கு அவர்கள் முயன்றால் பதுங்குகுழிகளிலிருந்து வரும் தாக்குதலையும் சமாளிக்க வேண்டும். கண்ணிவெடியையும் தாண்டி அவர்கள் வந்துவிட்டால் அகழிகள் எனப்படும் பள்ளங்களை அவர்களால் நிச்சயம் தாண்ட முடியாதாம். இந்த அகழிகள் 10 அடி ஆழமுடையன. இந்தப் பள்ளத்தை கவச வாகனங்களால் நிச்சயம் தாண்ட முடியாது. இப்படி எதிரிகளால் எளிதில் தங்களது பகுதிகளுக்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பு அரணை விடுதலைப் புலிகள் உருவாக்கி வைத்துள்ளனராம். இத்தகைய பாதுகாப்பு அரண்களை இதுவரை இலங்கைப் படையினர் சந்தித்ததில்லையாம். இதில் அவர்களுக்கு அனுபவமும் கிடையாதாம். இதுகுறித்தும் தெரியாதாம். ஐரோப்பிய நிறுவனங்கள் உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காகக் கொண்டு வந்த இயந்திரங்களைக் கொண்டு இந்த பாதுகாப்பு அரண்களை புலிகள் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நில மார்க்கமாக விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதிகளுக்குள் இராணுவத்தால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விடுதலைப் புலிகளிடம் மிகவும் அதி நவீனமான ஆயுதங்கள் ஏராளமாக இருக்கிறதாம். ஆனால், போதிய ஆட்கள் இல்லாததே அவர்களின் தற்போதைய பின்னடைவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
கந்தளாயில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தாக்குதல்: நால்வர் பலி
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாதலிக்குல் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். |
இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கந்தளாய் பிரதேசத்துக்குட்பட்ட சேரநாவ பகுதியில் சிறிலங்கா படையினரும் ஊர்காவல் படையினரும் சேர்ந்து அமைத்திருந்த காவலரண் மீது நேற்று திங்கட்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் காவலரண் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி - 01, அதற்குரிய ரவைகள் - 30, சொட்கண் - 01 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காவலரணானது அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. |
யாழில் தேர் முட்டிகளில் தேடும் இராணுவத்தினர்
பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தலாமென பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக இராணுவத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்தே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், யாழ் குடாநாட்டில் யாரும் இல்லாத வீடுகளையும் இராணுவத்தினர் சோதனைக் உட்படுத்திவருவதாகத் தெரியவருகிறது.
இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாருமில்லாத வீடுகளில் பதுங்கியிருப்பதாலும், யாருமற்ற வீடுகளில் சமூகவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதாலும் இந்தச் சோதனைநடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதிகளில் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய தென்மராட்சியில் இரவு 7 மணியிலிருந்து ஊடரங்குச்சட்டம் அமுலுக்கு வருவதாகத் தெரியவருகிறது.
இதுஇவ்விதமிருக்க ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தும் நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்கள் மீது எந்தவிதமான எச்சரிக்கையுமின்றி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனக் கூறும் அநாமதேய சுவரொட்டிகள் குடாநாட்டின் தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் கூறுகின்றன. எனினும், இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பிலிருந்து எந்தவிதமான அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை.
திங்கள், 29 செப்டம்பர், 2008
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் – ஆங்கில ஊடகம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2008, 02:33.31 AM GMT +05:30 ]
இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்தும் அந்தப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என பிரபல ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு விரோதமான கருத்துக்களை வெளியிடும் இராணுவத் தளபதிக்கு எதிராக யுத்த குற்றவியல் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர், மலே மற்றும் தலை தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் இந்தத் தேசம் சொந்தமானதென்பதை இராணுவத் தளபதி தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது.
உயர் இராணுவப் பதவியை வகிக்கும் சரத் பென்சேகா பேரினவாத அரசியல் சக்திகளைப் போன்று கருத்துக்கள் வெளியிடுவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இராணுவத் தளபதி என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு நூறு வீதம் கட்டுப்பட்டவராக சரத் பொன்சேகா பணியாற்ற வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனினும், ஓர் குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏனைய இனங்களை உதாசீனம் செய்வது படைத்தளபதி ஒருவருக்கு உசிதமாக அமையானதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டுச் செயற்பட முடியாவிட்டால் இராணுவச் சீருடை அணிவதில் அர்த்தமில்லை எனவும், மொத்தப் படையினரையும் சரத் பொன்சேகா அவமானப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இனத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதமாகவே அமைந்துள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கள மக்களுக்கு மட்டுமே இந்த தேசம் சொந்தமானது என்ற நிலைப்பாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்கும் இராணுவத் தளபதி தமிழ் சிவிலியன்களைப் பாதுகாப்பார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது
கொழும்பு துறைமுக வாசலுக்கருகில் உள்ள மணிக்கூண்டுக் கோபுரத்தினருகினிலேயே இவ் வெடிச்சம்மபவம் இடம் பெற்றுள்ளது. வான் ஒன்றிற்கு அருகிலேயே இவ் வெடிச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குரு என் ஆளு - படப்பாடல்கள்
மாதவன், மம்தா மோகந்தாஸ்,அப்பாஸ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் முக்கோணக் காதல் திரைப்ப்டமான குரு என் ஆளு படப்பாடல்களை பின்வரும் இணையத்தொடர்பு மூலம் தரையிறக்கி கொள்ளலாம்.
http://www.megaupload.com/?d=ZL07XJVY
Download Varanam Aayiram Mp3 Songs
Gautam Menon's 'Varanam Aayiram' starring Suriya, Divya Spandana, Sameera Reddy and Simran has generated a hype since it's launch a year ago. The audio launch of this speculated flick was held on 24th September at Satyam Cinemas, Chennai.
Sony BMG holds the audio rights and markets the musical score composed by Harris Jeyaraj. Among the canned songs, two of them were screened on the event. The cast & crew were present in entirety on the occasion that took place filled with a galore of celebrities from the film fraternity.
ஐ.நா.வின் வழித்துணையுடன் வன்னிக்கு உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படும்-இடம்பெயர்ந்த மக்களிடம் நேரடியாக விநியோகிக்கவும் ஏற்பாடு
அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கடந்த 16 ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியதையடுத்து நேற்றுவரை அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணப் பொருட்களை தங்குத்தடையின்றி வழங்க வேண்டுமென அமெரிக்கா உட்பட ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.நா. வும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. இதனையடுத்தே உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருள், வாகனத் தொடரணியை ஐ.நா. அதிகாரிகள் வழித்துணையுடன் கட்டுப்பாடற்ற பகுதிக்கு அனுப்ப அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் கடந்த 16 ஆம் திகதிக்குப் பின்னர் உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய வாகன தொடரணி ஐ.நா. கொடியை தாங்கியவாறு ஐ.நா. அதிகாரிகளின் வழித்துணையுடன் சில நாட்களில் வன்னிக்கு செல்லவுள்ளது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களை அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கும் வசதி தற்போது இல்லை. எனவே அவற்றை இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் நேரடியாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலாவது வாகனத் தொடரணியின் வெற்றி மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதன் பெறுபேற்றின் அடிப்படையிலேயே எதிர்கால விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும்.
இந்த உணவுப் பொருட்களின் விநியோகம் ஐ.நா. அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும். விநியோக நடவடிக்கை முடிவடையும் வரை ஐ.நா. அதிகாரிகள் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் தங்கியிருப்பர்.
வன்னிப் பகுதிக்கான உணவு விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறுவது அவசியமானதாகும். தமது சொந்த இடங்களை விட்டு பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கான உணவு விநியோகம் சீராக இடம்பெறாவிட்டால் அவர்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாவர் என்றார். இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் ஐ.நா. முகவர் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குமிடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
மல்லாகம் பகுதியில் இரவு வேளையில் திருட்டு
கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் கிராம அலுவலர் பாலபத்தமன் வீட்டின் மதில் சுவரைப்பாய்ந்து ஆயுதங்களுடன் சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் அங்கிருந்து சுமார் ஜந்து லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்கள் இந்த சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து பறிப்பட்ட திருடர்கள் பனங்கட்டடித் தொழிற்சாலை அமைந்துள்ள ஒழுங்கையில் உள்ள கதிர்காமத்தம்பி என்பவருடைய வீட்டிற்குச் சென்று கொள்ளையிட் முயன்ற வேளையில் வீட்டார் சத்த்மிட்டதைத் தொடர்ந்து கொள்ளையர்கள் கொண்டுவந்த கத்தியையும் கைவிட்டு தப்பி ஓடியுள்ளாhகள் இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்ட்டுள்ளது E-mail to a friend
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் இளைஞரின் சடலம் மீட்பு
கட்டைக் காற்சட்டையும் ரீசேட்டும் அணிந்த காணப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட சடலம் சுமார் 25 க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவருடையதாக காணப்படலாம் எனவும் இவர் ஒரு பெயின்ரராக இருக்க முடியும் எனவும் சடலத்தில் காணப்பட்ட உடைகளில் காணப்படும் பெயின்ரின் மூலம் ஊகிக்கப்படுகின்றது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.இவர் வேறு இடத்தில் சுடப்பட்டுக் கொண்டு வந்து பொடப்பட்டரரா அன்றி சத்தம் கெட்க்காத முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டரா என்பதையும் அறிய முடியவில்லை.
இலங்கையின் வடக்கே அதிகரித்துள்ள மோதல் குறித்து பிரித்தானியா கவனம் -லோக் மல்கோக் பிறவுன்
பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுன் மற்றும் சர்வதேச அபிவிருத்தி செயலாளர் டக்ளஸ் அலக்சாண்டர் ஆகியோர் இவ்விடயம் குறித்து நியூயோர்க்கில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரயாடியுள்ளனர்.
அதேவேளை பொதுமக்களை சுதந்திரமாக நடமாடவும் வெளியேறுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம். மேலும் இருத்தரப்பினரும் சர்வதேச சட்ட விதிமுறைகளிற்கு அமைவாக மனிதபிமான தொண்டு நிறுவனங்களின் சுதந்திரமான செயற்பாடுகளிற்கும் மோதல் இடம்பெறும் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு குறித்து கவனத்திற்கு கொள்ள வேண்டுமென அறிக்கையில் லோட் மல்லோக் பிறவுன் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் மினி முகாம் புலிகளால் தாக்கியழிப்பு: 6 பேர் பலி; ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. |
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் மினி முகாம் அமைத்திருந்தனர். இம்முகாம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். முகாமை தமது கட்டுப்பாட்டில் 15 நிமிடம் வரை வைத்திருந்த விடுதலைப் புலிகள் அங்கிருந்தவற்றினை முழுமையாக தாக்கியழித்துள்ளனர். இத்தாக்குதலின் போது சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். இதில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்: பிகே எல்எம்ஜி - 01 பிகே ரம் ரவைக்கூடு - 01 பிகே எல்எம்ஜி ரவைகள் - 100 ஏகே ரவைக்கூடு - 09 ஏகே ரவைகள் - 200 கோல்சர் - 01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். |
வவுனியாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 9 பேர் காயம்
வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் சென்ற முச்சக்கர ஊர்தி மீது ஈருளி மோதிய போது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 9 பேர் காயமடைந்துள்ளனர். |
வவுனியா நகரில் இருக்கும் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள இரண்டாம் குறுக்குத் தெருவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:15 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர ஊர்தியில் ஆண் காவல்துறையினர் நால்வரும், பெண் காவல்துறையினர் ஒருவரும் சென்றுள்ளனர். இக்குண்டுத் தாக்குதலின் போது அருகிலிருந்த சிறிலங்கா படைத்துறை சோதனை நிலையமும் சேதமடைந்துள்ளது. இதில் சோதனை நிலையத்தில் நின்ற மூவர் காயமடைந்தனர். இவர்களில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார். இத்தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த நால்வரும், இராணுவத்தைச் சேர்ந்த மூவரும், பொதுமக்களில் இருவருமாக ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். |
கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: ஐந்து பொதுமக்கள் காயம்
கிளிநொச்சி பகுதியினை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். |
கிளிநொச்சியின் தெற்குப் பகுதிக்கிராமங்களான பாரதிபுரம், மலையாளபுரம் கிராம மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இ.ரஜித்குமார் (வயது 19) என்ற இளைஞரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன. ரி.காந்தரூபன் (வயது 21) என்பவர் காலை இழந்துள்ளார். வி.சதீஸ் (வயது 25) என்பவரும் ஜெகன் (வயது 30) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையும் மற்றொருவரும் இதில் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வி.சதீஸ் யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து இடம்பெயர்ந்து இப்பகுதியில் தங்கியிருந்தவர் ஆவார். கிளிநொச்சி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் மக்கள் வாழ்விடங்கள் அழிவுகளைச் சந்திக்கின்றன. |
ஞாயிறு, 21 செப்டம்பர், 2008
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்: "சண்டே ரைம்ஸ்"
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:
வவுனியா படைத் தலைமையகம் மீது 09.09.08 விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு அரசு விசாரணைக்குழுவை நியமித்துள்ளது.
வவுனியா வான்படைத் தளத்தின் வான்படை கட்டளை அதிகாரி குறூப் கப்டன் றொமேஷ் பெர்னாண்டோ இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலின் போது படைத்தளத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான ஆய்வுகளை இக்குழு மேற்கொள்ளவுள்ளது.
மேலும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இந்திரா இரு பரிமான கதுவீ (ராடர்) சேதமடைந்ததுடன் அதனை ஒத்த மேலும் பல முக்கிய இலக்குகளும் குறிவைக்கப்பட்டிருந்தன.
எனினும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அதனை வெளியிட முடியவில்லை.
இதனிடையே விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுத தளபாடங்களை தருவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
நான்காவது ஈழப்போர் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் தீவிர எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அவர்களின் வலிமையை குறைத்து மதிப்பிட முடியாது.
விடுதலைப் புலிகளின் 80 விகிதமான பலத்தை முறியடித்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்து வருகின்ற போதும் அண்மைய வாரங்களில் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வெள்ளி, 19 செப்டம்பர், 2008
ஐநாவுக்கு ஏற்றவாறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது – கோத்தபாய
சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சிவிலியன்களைப் போன்றே தொண்டு நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வெளியேறி, வவுனியாவில் இருந்து இயங்குமாறு ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதனை வெளியேற்றமாக கருதக் கூடாது எனவும், ஓர் இடம் நகர்வாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பூவியியல் அமைப்பு பற்றி தெளிவற்ற சில வெளிநாட்டு ஆய்வாளர்களே செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுகின்றனர். ஆபிரிக்காவைப் போன்று ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் செயற்பாடுமாறு நாம் கோரவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்னமும் அரசாங்க அதிபர்களின் ஊடாகவே விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வவுனியாவிலிருந்து இருந்து இயங்குவதன் மூலம் எவ்வித சிக்கல்களும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகரை, தொப்பிகல போன்ற பிரதேசங்களில் உணவு விநியோகம் மிகவும் சீராக இடம்பெற்றதென்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு அளித்த செவ்வியின் போது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னியில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வந்ததாகவும், தற்போதைய கள நிலவரப்படி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம்
இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர்.
கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் மஹிந்தனி அமாசா ஹபுவாராச்சி பம்பலப்பிட்டி லிண்ட்சே மகளிர் பாடசாலையின் சஜினி அஞ்சனா சேனாதீர மற்றும் புத்தளம் புனித அன்றூ மத்திய மகா வித்தியாலத்தைச் சேர்ந்த அபேசிங்ககே தோன மனீசா சுபிபி ஆகியோரே இவ்வாறு முதனிலை வகிக்கின்றனர்.
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 265000 மாணவ மாணவியரில் 30000 மாணவ மாணவியர் பிரபல பாடசாலைகளில் அனுமதி அல்லது புலமைப்பரிசில் பணத்தினைப் பெற்றுக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
ராஜபகஷவால் கொழும்பில் குண்டுவைக்க நியமிக்கப்பட்ட மாபியாக்குழு மர்மங்கள் சில இணையம் ஒன்றில் அம்பலம்
இன்று இலங்கையில் அரசாங்கம் வன்னி நிலத்தை மீட்டு இலங்கையை முற்று முழுதாக தன் வசப்படுத்தும் நோக்கில் தனது படை நடவடிக்கை ஆரம்பித்து பல இடங்களை கைப்பற்றி வரும் இத்தருணத்தில் வன்னி மீதான பாரிய கண்மூடித்தனமான தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. அந்தப் பாரிய போரில் பல பொதுமக்கள் கொல்லப்பட போகின்றார்கள் என்பது இங்கு நன்றாகவே புரியக்கூடிய உண்மை. அத்தருணத்தில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் இறக்கும் வாய்ப்பக்களே அதிகம். இந்த பாரிய தாக்குதலில் பொதுமக்கள் இறக்கும் போது வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்படும் என்பதை கருத்தில்க் கொண்டு உடனடியாக அந்த அழுத்தத்தை மறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியதாகவும் அதற்கு தலைமை தாங்குகிறார் இலங்கை ஜனாதிபதியின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச அவர்கள்.
இத்தாக்குதலில் ஏற்படும் படுகொலைகளை வெளிநாடுகளுக்கு மறைக்கும் முகமாகவே வன்னியிலிருந்து தொண்டு நிறுவனம் அவசர அவசரமாக வெளியேற்றப் பட்டடனர்.
திட்டங்கள் வருமாறு
ரெயில் பஸ்களில் குண்டு வைப்பது பாடசாலைகளில் தாக்குதல் நடாத்துவது. பஸ்களில் வைத்துக் கொல்வதால் இதன் மூலம் உலகநாடுகளின் அனுதாபத்தைக் கவர முடியும். சிறுவர்களை புலிகள் கொல்வதாக சொல்லமுடியும். இதனூடாக அனுதாபத்தை அடைய முடியும் என்பது அவர்களது குறிக்கோள்.
இத்திட்டத்திற்காக 4 குழுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஒரு தமிழ்க்குழு, ஒரு முஸ்லிம் குழு, 2 சிங்களக்குழு. ஒரு குழுவில் 7இல் இருந்து 12 பேர் வரை அடங்கியுள்ள இக்குழுக்களில் தமிழ் குழுவில் 9பேர் உள்ளடங்கியுள்ளனர் என்பது தெட்டத்தெளிவான உண்மை. இத்தமிழ்க் குழுவின் தலைவர் யாழ்ப்பாணம் தொண்டமானாறைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் முன்பு புலிகள் அமைப்பில் இருந்ததாகவும் பணமோசடி காரணமாக தலைமறைவாகி திரிந்தவர்.
முஸ்லிம் குழுவின் தலைவர் அவரும் அதே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தவர். இவருடைய சகோதரன் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த குழுக்கள் செய்யப்போகும் செயல்மூலம் தமிழ்மக்களுக்கு பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுவது உண்மை. இதில் பாதிக்கப்படுவது புலம்பெயர்தமிழ்மக்களே. இதைத்தடுக்கும் சக்தியாக புலிகள்தான் முன்வரவேண்டும். அதாவது வெளிநாட்டவர்களை இலங்கையில் இருந்து வெளியேற்றி வெளிநாட்டவர்களது உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்துடன் அனைத்துப் பாடசாலைகளும் தற்காலிகமாக மூடிக் காப்பாற்ற வேண்டும். இதைச் செய்யக்கூடிய வல்லமை புலிகளின் அறிக்கைகள் மூலமே நடைமுறைக்கு வரும் என்பதை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வன்னிக் களமுனைகள் பலவற்றில் புலிகள்-படையினர் உக்கிரச் சமர்!
வன்னிக்களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்றும் பல இடங்களில் உக்கிர சமர்கள் இடம்பெற்றுள்ளன.
விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்குடன் இராணுவத்தினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னேரிக்குளம் பகுதி நோக்கி நேற்றுக்காலை பெருமெடுப்பில் இராணுவம் முன்னேற முயன்றவேளையில் அங்கு இரு தரப்புகளுக்கும் இடையே போர் மூண்டது. ஏறக்குறைய நான்கு மணித்தியாலயங்கள் நடந்த இந்தச் சண்டையில் குறைந்தது 22 படையினர் கொல்லப்பட்டனர். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
இராணுவத்தை சற்றுத்தூரம் முன்னேறவிட்டு, பிறகு எமது படையணிகள் தீவிர முறியடிப்புப் பாய்ச்சலை மேற்கொண்டன. அப்போது உயிரிழந்த தமது சகாக்கள் சிலரது சடலங்களையும் கனரக ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான படைப்பொருள்களையும் கைவிட்டுவிட்டு இராணுவத்தினர் தமது பழைய நிலைகளுக்குப் பின்வாங்கி ஓடிவிட்டனர். என்று வன்னியிலுள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இராணுவத் தரப்பிலிருந்து நேற்றுமாலை வரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை
வன்னி வடிளாங்குளத்தில்...
வன்னி விளாங்குளம் மன்னகுளம் புதூர் பகுதிகளை நோக்கி பெருமெடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரை தமது படையணிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இந்தச் சமரில் 10 இராணுவத்தினர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர் என்றும் புலிகள் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் நகர்வை ஆரம்பித்த படையினர், நேற்றுமுன்தினம் மாலையில் அங்கிருந்து பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்குச் சென்றனர் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சமரின்போது இராணுவத்தினர் கைவிட்டுச் சென்ற படைப்பொருள்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.
அக்கராயன் குளத்தில்
நாச்சிக்குடா பகுதியில் உள்ள கரம்பைக்குளம் குளக்கட்டு பகுதியிலும், அக்கராயன் குளம் பிரதேசத்திலும் நேற்றுமுன்தினம் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களில் கொல்லப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தலைமையகம் நேற்று அறிவித்தது. பெரும் எண்ணிக்கையான படையினர் இதில் காயமடைந்து விட்டனர் எனத் தெரிவித்த இராணுவத் தலைமைப்பீடம், இந்தச் சண்டைகளில் 40 விடுதலைப் புலிகள் இறந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டது.
அதேவேளை வன்னேரிக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மோட்டார் மற்றும் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடங்களை இலக்குவைத்து நேற்றுமதியம் 12 மணிக்கும், 12.30 மணிக்கும் ஜெற் மற்றும் எம்.ஐ. 24 ரக ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை நடத்தின என்று படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது.
புலிகளின் வானோடிகள் குறித்து ஆராய்ந்து வரும் சிறிலங்கா புலனாய்வுத்துறை
தமிழீழ விடுதலைப் புலிகளின் வானோடிகளின் திறன் குறித்து அவற்றை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்த விரைந்த சிறிலங்கா வான் படையினரின் மூலம் தெரிந்து கொண்டுள்ள அரச புலனாய்வு வட்டாரங்கள், இவ்வளவுக்கு புலிகள் எவ்வாறு வானூர்தி ஓட்ட பயிற்சி பெற்றார்கள் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. |
இது தொடர்பில் அறிய வருவதாவது: வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வானூர்திகளை கலைத்து சென்று தாக்குதவதற்கு கொழும்பிலிருந்து சென்ற சிறிலங்கா வான் படையின் எஃப்-7 வானூர்திகள் அந்த கும்மிருட்டு வேளையிலும் ஒருவாறு புலிகளின் வானூர்தியை கண்டுவிட்டன. தனது வானூர்தி சிறிலங்கா வானூர்தியின் கண்காணிப்பு எல்லைக்குள் வந்துவிட்டதை அறிந்துகொண்ட புலிகளின் வானோடி தனது வானூர்தியை திடீரென கரணம் அடிக்கச்செய்து, சிறிலங்கா வானூர்தியின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார். அதேபோல, வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த புலிகளின் வானூர்தி அங்கு சிறிலங்கா வான்படையின் எஃப்-7 தாக்குதல் வானூர்தி வந்தவுடன் உடனேயே முல்லைத்தீவுக்கு திரும்புவது போல பாசாங்கு செய்துவிட்டு, முல்லைத்தீவு நோக்கி அரைவாசி தூரம் சென்றுவிட்டு, திடீரென திரும்பி வந்து வவுனியா கூட்டுப்படைத்தள அதிகாரி நிர்மல தர்மரட்ணவின் அதிகாரபூர்வ இருப்பிடத்தின் மீது குண்டென்றை வீசிச்சென்றது. இது போன்ற நுணுக்கமான வான்படை போரியல் முறைகளை இவ்வளவு நேர்த்தியாக புலிகள் எங்கு பயிற்சி பெற்றார்கள் என்பது குறித்து சிறிலங்கா அரச புலனாய்வு வட்டாரங்கள் ஆராய்ந்து வருகின்றன. சிறிலங்கா படைத் தரப்பு வட்டாரங்களிலிருந்து பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறுகையில், வவுனியா தாக்குதலை பொறுத்தவரை அங்கு தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வானூர்தியை சுட்டு வீழ்த்தச்சென்ற சிறிலங்கா வான்படை வானோடியை விட புலிகளின் வானோடி மிகவும் சாமர்த்தியமானவர் என்று குறிப்பிட்டுள்ளார். |
வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை
வன்னிப்பெரு நிலப்பரப்பில் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அவல நிலைமைகள் தொடர்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். |
ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை அனைத்துலக மனித உரிமைகள் ஆணையத்தின் ஒன்பதாவது அமர்வு இடம்பெற்றது. அங்கு மனித உரிமைகள் பற்றிய விவாதத்தில் உரையாற்றும்போதே தூதுவர்கள் இவ்வாறு கவலை தெரிவித்தனர். போர் நடவடிக்கைகளினால் வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் நிவாரணங்கள் சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் போதுமானவையாக இல்லை என்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் தூதுவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை ஆட்கடத்தல், காணாமல் போதல், கொலைகள் போன்ற மனித உரிமைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். அதேவேளை போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு பேச்சுக்கான சூழ்நிலையை ஏற்படுவதற்குரிய ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஈடுபட வேண்டும் நெதர்லாந்து தூதுவர் வலியுறுத்தினார். அனைத்துலக மனித உரிமைகள் ஆணையத்தின் ஒன்பதாவது அமர்வில் ஜக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அமெரிக்கா ஹியூமன் றைற் வொச், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை, இந்த உரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அறிக்கைகளாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இராஜதந்திரிகள் தெரிவித்தனர். |
வாயுத்தாக்குதலுக்கு எதிராக முகமூடிகளை பயன்படுத்த ராணுவம் முடிவு
வியாழன், 18 செப்டம்பர், 2008
நாச்சிக்குடாவுக்கு அண்மையாக கடலில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் சண்டை
எந்திரன் - ரஜினி-ஷங்கர் வெற்றி கூட்டணியின் சீசன்-2 தொடங்கி விட்டது
ரஜினி-ஷங்கர் வெற்றி கூட்டணியின் சீசன்-2 தொடங்கி விட்டது. இங்கல்ல, படுஅமர்க்களமாக அமெரிக்காவில்.
ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடியான இரண்டு பாடல்களுக்கு அமெரிக்காவில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் ஆட ஆரம்பித்துவிட்டார்கள்! `ஒரு கூடை சன்லைட்' பாடல்போல் இந்த இரண்டு பாடல்களுமே புது பாணியில் இருக்கிறது என்கிறது ரஹ்மான் வட்டாரங்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவில்தான் அத்தனை ரகசியங்களும் இருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற காஸ்ட்யூம் டிஸைனரான மேரி-இ வோட், ஸ்டண்ட் மாஸ்டர் யென் வூ பிங்க் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மாயாஜாலம் காட்டும் ஸ்டேன்வின்ஸ்டன் என ஹாலிவுட் ஜாம்பவான்களுடன் கை கோர்த்திருக்கிறார் ஷங்கர்.
ரொம்ப சிம்பிளான கதைதான். விஞ்ஞானியான ரஜினி தனது தீவிரமான சோதனைகள் மூலம் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். ஒரு மனிதனைப் போலவே இந்த ரோபோ எல்லா விஷயங்களிலும் பட்டையைக் கிளப்புகிறது. ஒரு கட்டத்தில் ரோபோ தனது நல்ல கேரக்டரிலிருந்து மாறி வில்லன் போல அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கிறது. இதை உருவாக்கிய விஞ்ஞானி ரஜினி, எப்படிச் சமாளித்து வெற்றி பெற்று மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதே கதை. இதில் விஞ்ஞானியும் ரஜினிதான். ரோபோவும் ரஜினிதான். கதை சில வருடங்களுக்கு முன்பே முடிவாகிவிட்டாலும், தற்போது ரஜினியின் இமேஜ் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப திரைக்கதையிலும், வசனங்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர்.
ரஜினியின் ரோபோ கேரக்டரைப் பொறுத்தவரை பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் நடித்த `பை சென்ட்டெனியல் மேன்' படத்தில் வரும் ரோபோ கேரக்டரைப் போலவே உருவக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய `ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' என்ற படமும் ஷங்கருக்கு இன்ஸ்பிரேஷன்.
`ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸில் தூள்கிளப்பியது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டூடியோ. தற்போது இதே நிறுவனம்தான் எந்திரன் ரஜினியின் பரபர ஆக்ஷன் காட்சிகளை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மிரட்ட இருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் யென் வூ பிங்க்கின் கால்ஷீட்டை மொத்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள். இன்று உலகளவில் நம்பர் ஒன் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இவர்தான். ஜாக்கிசானுக்கே வழி காட்டியவர்.
ரஜினிக்கு ஸ்பெஷல் பயிற்சியும் அளிக்கத் தயாராகிவிட்டார் யென். அமெரிக்காவில் நடைபெறப்போகும் இந்தப் பயிற்சிகள் ரஜினியின் உடல் வலிமையை மட்டுமல்ல மனவலிமையையும் கூட்டுமாம்.
ரோபோ ரஜினியின் காஸ்ட்யூமை வடிவமைக்கப் போவது மற்றொரு ஹாலிவுட் காஸ்ட்யூம் டிஸைனர் மேரி.இ.வோட். இவர்தான் `மென் இன் பிளாக்', `பேட்மேன் ரிட்டர்ன்ஸ்' போன்ற படங்களில் உலகின் கவனத்தைக் கவர்ந்தவர்.
விஞ்ஞானி ரஜினியின் ஸ்டைலான லுக்கிற்கு கியாரண்டி கொடுப்பவர் பாலிவுட்டின் காஸ்ட்யூம் டிஸைனர் மணீஷ் மல்ஹோத்ரா. `சிவாஜி'யில் ரஜினிக்கு காஸ்ட்யூம் டிஸைன் செய்தது இவர்தான். ``இந்த வருடம் வெல்வெட் டைப் காஸ்ட்யூம்களுக்கு வரவேற்பு இருக்கும். அதே போல ஸ்லிம் ஃபிட் உடைகள்தான் இப்ப ட்ரெண்ட்'' என்கிறார் மணீஷ். ஐஸ்வர்யாராயின் உடைகளையும் வடிவமைத்துவிட்டார்களாம். அந்த உடை டிசைன்களை பார்த்த ஐஸ் `வாவ்' என்று சொன்னதாக பாலிவுட் வட்டாரங்கள் சொல்லுகின்றன.
மொத்தத்தில் ரஜினி -ஷங்கர் கூட்டணி மீடியாவின் கவனத்தை மீண்டும் தங்கள் மீது கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. அதனால் இனி கவர் ஸ்டோரிகளுக்கும், குட்டிச் செய்திகளுக்கும் பஞ்ச மிருக்காது..
ஏ9 வீதியில் கிளைமோர் தாக்குதல்- பொதுமக்கள் பலி
இன்று வியாழக்கிழமை காலை 8.10 மணியளவில் பயணிகள் பேருந்து மீது கண்டிவீதியில் புளியங்குளம் புதூர் சந்தியில் வைத்து சிறிலங்கா படையினர் கிளைமோர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் மூவர் பேர் கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்தனர்.லலிதாராணி (வயது 28), கேதீஸ்வரன் (வயது 28), செல்வநாயகம் (வயது 48) ஆகியோர் காயமடைந்தனர்.கொல்லப்பட்டவர்கள் பெயர் விவரம் இதுவரை கிடைக்கவில்லை.
அக்கராயனில் அண்மையில் நடந்த சண்டையில் புலிகள் புதிய தயாரிப்பு பல்குழல் பீரங்கி
இதனாலேயே படையினருக்கு அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளன,ஆனால் அதை மூடி மறைத்து புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வன்னியில்விடுதலைப் புலிகள் விஷவாயு ஆயுதங்களை பயன்படுத்தியதாக இராணுவத் தரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது
கிளிநொச்சியில், அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது விடுதலைப் புலிகள் மூச்சுத் திணறல் உண்டாக்கக் கூடிய C.S.GAS எனப்படும் விஷ வாயுவைக்கக்கும் கிரனேட் குண்டுகளைக் கொண்டு படையினர் மீது தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
அக்கராயன் மோதலின் போது மூச்சுத் திணறல் காரணமாக 6 இராணுவத்தினர் அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புலிகளின் விஷவாயு கக்கும் கிரனேட் குண்டுகளாலேயே பாதிக்கப்பட்டனர் என்று கருதப்படுவதாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மோதல்கள் இடம்பெறும் வேளைகளில் எதிர்த்தரப்பினரை பலவீனப்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகள் கையாளப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வகையிலேயே படையினரின் உற்சாகத்தையும் பலத்தையும் முறியடிக்கும் வகையில் விடுதலைப்புலிகள் புதியதொரு நடமுறையைக் கையாண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக கிளிநொச்சி, அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம் மற்றும் மேற்கு மாங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருதரப்பு மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் மூச்சுத் திணறலை ஏற்படுத்தக் கூடிய விஷ வாயுவைகக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 6படையினர் மூச்சு தினறல் ஏற்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகளை ஒத்ததான இந்தக் குண்டுத் தாக்குதலினால் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் விடுதலைப் புலிகளால் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதனை முறியடிக்கும் வகையில் படையினரும் சுகாதாரத்துறையினரும் நட வடிக்கை எடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
புதன், 17 செப்டம்பர், 2008
இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம் - மீனவர்கள் படகுகள் உடைப்பு
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல, இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தையும் அடக்க முடியவில்லை. தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கிவருகிறது இலங்கை கடற்படை.
தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக முதல்வர் கருணாநிதி பலமுறை எச்சரிக்கை விடுத்தும், நயமான முறையில் கோரிக்கைகள் விடுத்தும் கூட, இலங்கை கடற்படையின் வெறிச் செயல் கொஞ்சமும் குறையவில்லை.
முன்பு குருவிகளை சுடுவது போல தமிழக மீனவர்களை சுட்டு வந்தனர். இப்போது தமிழக மீனவர்களின் படகுகளைத் தாக்கியும், மீனவர்களைக் காயப்படுத்தியும் வருகின்றனர். இது மட்டுமே அவர்களிடம் தெரியும் வித்தியாசமாகும்.
நேற்று காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரு பெரிய கப்பல்களில் கடற்படையினர் அங்கு வந்தனர்.
பின்னர் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்த கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளையும் சரமாரியாக சுட்டுத் தள்ளினர். பின்னர் 25க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மீது தங்களது கப்பல்களால் மோதி சேதப்படுத்தினர். இதில் ஒரு படகுமுற்றிலும் உடைந்து போனது.
அப்படியும் வெறி தணியாமல், மீன் பிடி வலைகளை துப்பாக்கிகளால் குத்திக் கிழித்து சேதப்படுத்திய பின்னர், இனிமேல் எல்லைப் பகுதியைத் தாண்டி வந்து மீன் பிடிக்கக் கூடாது. மீறினால் சுட்டு வீழ்த்தி விடுவோம் என எச்சரித்து விட்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பினர். உடைந்த படகையும் தங்களது படகுடன் கட்டி கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கோபத்தையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்தால், மீண்டும் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியப் படையை அனுப்பியதைக் கண்டித்து தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார்.
வவுனியாவில் விடுதலைப் புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதலின் போது சிறிலங்காப் படையினருக்கு உதவியாக செயற்பட்டு வந்த இந்தியப் படையினரின் பொறியியலாளர்கள் இருவர் படுகாயமடைந்த செய்தி அம்பலமானது.
இது தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின் இந்த தமிழின விரோதப் போக்குக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் இலங்கைத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு இந்திய அரசாங்கம் அளித்து வரும் படை உதவிகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பேசியதாவது:
விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, புலிகளின் வானூர்திகளோ 20 கிலோ குண்டுகளைத்தான் வீசும். அதுவும் ஆறு முறைதான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால் எமது சிங்கள இராணுவமோ 6 ஆயிரம் முறைகளுக்கு மேல் ஆயிரக்கணக்கான கிலோ கொண்ட குண்டுகளை தமிழர்கள் மீது வீசித் தாக்கியிருக்கிறது என்று ஒப்புக் கொண்டுள்ளார். அப்படியானால் இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் எத்துணை கொடூரமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அத்தகைய சிறிலங்கா படையினருக்கு இந்திய அரசாங்கம் உதவுவது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.
திரைப்பட இயக்குநர் சீமான் பேசியதாவது:
சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை என்றுதான் இதுவரை செய்திகள் வெளியாகி உள்ளன.
ஒருபோதும் இந்திய மீனவன் சுட்டுக்கொலை என்று செய்தி வெளியானது இல்லை. அப்படியானால் தமிழ்நாடு என்பதும் தமிழ் மீனவன் என்பவனும் இந்தியா என்கிற நாட்டில் இல்லையா?
எதிரி நாடாக இருந்தாலும் இந்திய மீனவனை பாகிஸ்தான் சுட்டுக்கொன்றது இல்லையே?
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்காவின் தாக்குதலை எப்போதாவது இந்தியா வாய்திறந்து கண்டித்தது உண்டா?
ஏன்? எதற்காக? இப்படி எல்லோரும் சிங்களவனுக்குப் போட்டிப் போட்டு ஆதரவு தருகிறார்கள்? என்றார்.
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த தொல். திருமாவளவன் பேசியதாவது:
தமிழர்கள் மீதான படுகொலையை நிகழ்த்துவதில் இந்தியாவும் சிங்களமும் கைகோர்த்து செயற்பட என்ன காரணம்?
இங்கே ஏழை மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா கல்விக்கடன் வழங்காமல் அவர்களை பிச்சை எடுக்க வைக்கின்ற அரசாங்கம், பல ஆயிரம் கோடிக்கு தளபாட உதவி- கடனுதவி கொடுக்கிறீர்களே ஏன்?
தளவாடங்கள்- பொறியியலாளர்கள் கொடுக்க சட்டத்தில் இடமிருக்கா?
சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதித்தீர்களா?
யார் உங்களுக்கு அனுமதி தந்தது?
குறைந்தபட்சம் தமிழ்நாட்டு முதல்வரிடமாவது பேசினீர்களா?
இந்தியாவின் வெளிவிவகார கொள்கை என்பது தற்சார்புக் கொள்கை அல்ல. அது அமெரிக்காவின் கொள்கைதான்.
சிங்களவருக்கான இந்தியாவின் உதவி சரியா தவறா என்பது குறித்து பொதுமக்களிடத்தில் வாக்கெடுப்பு நடத்துங்கள். உண்மை தெரியும்.
சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்வோருக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலிலே தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார் அவர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
விண்ணில் வலம் வரும் தமிழரின் முதல் வானூர்தி
எயார் திராவிடா என்ற பெயரில் தமிழகத் தில் ஆரம்பமாகும் இந்த விமான சேவை, சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, பெங்களூர், ஐதராபாத் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலதலைநகரங்க ளுக்கும் செயல்பட உள்ளது.
தமிழ் நாட்டில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் மிகுந்த தமிழ் பற்றாளர். அதுமட்டுமின்றி உலகம் முழு வதும் உள்ள தமிழர்“கள், பல நாடுகளில் புலம் பெயர்ந்தாலும், அவர்கள் ஒன்றிணைந்து ஒரு கட்டுக் கோப்பாக வாழ வேண்டும் என்பதில் உறுதி யாக உள்ளவர்.
ஷேக் தாவூத் தொடங்கவுள்ள விமானக் கம்பனியின் பெயர் எயார் திராவிடா .தனது விமானக்கம்பெனிக்கு ஏன் இத்தகைய தமிழ் பெயரை வைத்தார் என்ற காரணத்தைக் கேட்டபோது ஆங்கில மோகம் தலைவிரித் தாடும் இந்தக் காலத்தில், உலகமெங்கும் தமி ழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். அதுவே நீண்ட நாளைய எனது கனவாகும். அந்த வகை யில் நான் இப்பெயரை தேர்ந்தெடுத்தேன். இந்த விமான சேவைத்திட்டத்துக்கு100 கோடி இந்தியப் பணத்தை முதலீடு செய்ய விரும் புகின்றேன். எனது இந்த எயார் திராவிடா கம்பனியில் யாவரும் பங்கு தாரர்களாகவும், சரி யான முறையில் இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு, அரசாங்க வங்கிகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாட்டு தமிழ் பேசும் மக்கள் பங்கு பெறலாம். அதற்காக நான் அடுத்த சில நாட்களில் கனடா, அமெரிக்கா, லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற் கொள்ளவுள்ளேன்.
அப்போது அங்கு வாழும் தமிழர்களிடையே இது குறித்து கலந்துரையாடுவதற்கு ஐரோப் பிய நாடுகளில் செயல்படும் தமிழ் சங்கங்கள் ஏற்பாடு செய்கின்றன. என்னுடைய விருப்ப மெல்லாம், உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் எனது எயார் திராவிடா கம் பனியில் பங்கு பெறவேண்டும் என்பதே. உங்கள் விமான சேவைக்கு ஏன்,எயார் திராவிடா என்று வித்தியாசமாக பெயர் வைத்தீர்கள் எனக் கேட்ட போது உலகத்தில்தமிழர் கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று அனை வரும் வியப்புற வேண்டும், மட்டு மின்றி எனது விமானக் கம்பனியில் விமா னம் ஓட்டும் விமானிகளை தமிழர்களாகவே தேர்ந் தெடுத்துள்ளேன். அதற்காக பத்து தமிழ் பேசும் விமான ஓட்டிகளை தெரிவு செய்து , அவர்கள் பயிற்சி பெற எனது சொந்த செலவிலேயே அவுஸ்தி ரேலியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அனுப்பி யுள்ளேன். அவர்கள் அங்கு பயின்று கொண்டி ருக்கின்றனர். விமானப் பணியாளர்க ளும்தமிழர்களாகவே இருப்பார்கள். விமானத் தில் தமிழ் மங்கள ஓசை, நாதஸ்வரம் எப் போதும்,ஒலித்துக்கொண்டே இருக்கும். விமானத்தினுள்ளே அறிவிப்புகள் தமிழாகவே இருக்கும். தமிழ்தெரியாதவர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்து தரப்படும். அதோடு விமா னத்தில் தமிழ் நாட்டு உணவு வகைகளே வழங்குவோம். மொத் தத்தில் அனைத்தும் தமி ழாகவே இருக்கும். நாம் பல நாடுகளில் வாழ்ந்தாலும், முதலில் நாம் தமிழர்கள் என்ற கலா சாரத்தை மறக்கக் கூடாது.
தமிழன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். எனது எயார் திராவிடா விமானம் முத லில் இந்தியா வில் செயல்படும் அடுத்து தமிழர் கள் அதிகமாக வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நாடுகளிலும், செயல்படும்.
தொடர்ச்சியாக உலகமெங்கும் பறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் அனைத்து நாட்டு மக்களும் எமது எயõர் திராவிடா ஸ்தாபனத்தில் பங்குபெற வேண் டும், முதன் முதலில், தமிழன் கப்பல் விட்டதைப் போல், விண்ணிலும் தமிழனின் பயணிகள் விமானம் பறக்க வேண்டு மென்பதே எனது ஆசை. இவ்வாறு தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியின் போது தெரிவித்தார்