வியாழன், 18 டிசம்பர், 2008

வாகரையில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்: இருவர் பலி



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வாகரை பகுதியில் உள்ள தட்டுமுனையில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினரின் காவலரண் மீது விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தினர்.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: