வெள்ளி, 19 டிசம்பர், 2008

கிளாலி மோதலில் சிறீலங்கா படைகளின் கவச ஊர்திகளுக்கும் சேதம்

யாழ் கிளாலியில் இடம்பெற்ற நேற்றைய சமரில் சிறீலங்கா படைகளின் கவச ஊர்திகள் சிலவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சேதமடைந்த ஊர்திகளை மீட்ட சிறீலங்கா படையினர், அவற்றை காவு பார ஊர்தியில் இழுத்து சென்றதை நேரில் பார்த்திருப்பதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் தென்மராட்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நேற்று புதன்கிழமை அதிகாலை இவ்வாறு இரண்டு பார ஊர்திகளில் சிறீலங்கா படையினர் சேதமடைந்த கவச ஊர்திகளைக் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் சிறீலங்கா படையினர் கிளாலியில் இடம்பெற்ற மோதல் பற்றி இதுவரை தெளிவான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், கிளாலியில் முன்னகர்ந்து தாக்கிய படையினர் காலையிலேயே தமது தளம் திரும்பியிருப்பதாக மட்டும் சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

நன்றி இன்போதமிழ்

கருத்துகள் இல்லை: