புதன், 15 அக்டோபர், 2008

பல கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு



பல கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியொருவர் குறித்து நுகேகொடை பிரதேச பொலிஸ் நிலையத்தில் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சுமார் 25 பேர் நுகேகொடைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக நுகோகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: