ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தமிழ்த் திரையுலகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் திரையுலகம் நடத்திய பிரமாண்ட பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஈழத்தில் நடக்கும் தமிழின படுகொலையை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தாய் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட, சேகரிக்கப்படுகிற அத்தியாவசிய உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமேஸ்வரம் மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவதை இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மத்திய அரசு எங்களது இரத்த உறவுகளை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது. இராணுவப் பயிற்சி என்ற பெயரால் ராடர் கருவிகளையும், பொறியியலாளர்களையும் அங்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக அனைத்து தமிழர்களும் ஓரணியில் நின்று போராட வேண்டிய நேரத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மறந்து விட்டு அனைத்து கட்சிகளும் ஒரே கட்சியாக ஓரணியில் நின்று எங்களை போன்ற தமிழின உணர்வாளர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இராமேஸ்வரத்தில் தொடங்குகின்ற இந்த திரையுலக இன உணர்வுக்குழுவின் போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை தொடரும், தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
செவ்வாய், 21 அக்டோபர், 2008
ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்: தமிழ்த் திரையுலகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக