வன்னிக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. |
வன்னியின் மேற்கு களத்தில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரில் ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இந்த உடலம் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுதலைப் புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிறுவனங்களுக்கான தொடர்பகத்தினரால் இந்த உடலம் இன்று கையளிக்கப்பட்டது. |
செவ்வாய், 28 அக்டோபர், 2008
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒப்படைப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக