வியாழன், 23 அக்டோபர், 2008

அம்பாறையில் நேரடி மோதல்: சிறப்பு அதிரடிப் படையினர் இருவர் பலி!


அம்பாறையில் சிறீலங்கா அதிரடிப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அம்பாறை வக்குமுட்டியாப் பகுதியில் இம் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

மோதலின்போது, சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அணியினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: