வெள்ளி, 24 அக்டோபர், 2008

கருணாநிதியை கைது செய்யுமாறு ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்


தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் நபர்களைக் கைது செய்யாமல், வேண்டுமென்றே வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்துள்ள முதல்வர் கருணாநிதியைக் கைது செய்யுங்கள், என மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு விரோதமான கருத்துக்களைத் தெரிவித்த இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், ராம.நாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: