வெள்ளி, 24 அக்டோபர், 2008

புலிகளின் இரசாயன தாக்குதலுக்கு முகங்கொடுக்க தயார்- நிமல் சிறிபால டி சில்வா


புலிகள் இரசாயனத் தாக்குதல் மேற்கொண்டால், அதற்கு முகங்கொடுப்பதற்கு சுகாதார பிரிவு தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

புலிகளின் இரசாயன தாக்குதல் தொடர்பில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரன எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளின் இரசாயனத் தாக்குதலுக்குள்ளாகும் படையினருக்கு சிகிச்சையளிப்பதற்கான சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாககவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறினார்

கருத்துகள் இல்லை: