| மணலாறில் உள்ள தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. |
தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு சிறிலங்கா படையினர் பாரிய எடுப்பில் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் முன்நகர்வுத்தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று பிற்பகல் 6:00 மணிவரை தாக்குதல் நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர். இதில் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட்டுள்ளன. ரி-56 ரக துப்பாக்கி - 01 ரி-56-2 ரக துப்பாக்கி - 01 ஆர்பிஜி செலுத்தி - 01 தலைக்கவசங்கள் - 04 ரவைத்தடுப்பு அணிகள் - 04 ரவைத்தாங்கி அணிகள் - 02 பை - 01 உள்ளிட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. |
திங்கள், 13 அக்டோபர், 2008
மணலாறில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 2 உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் மீட்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக