வியாழன், 16 அக்டோபர், 2008

இராக்கில் முக்கிய அல்கையீதா தலைவர் கொல்லப்பட்டுள்ளார்



இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவம் அல்கயீதா இயக்கத்தின் இராக்கிய பிரிவின் இரண்டாவது தளகர்த்தரை தான் கொன்றுவிட்டதாக கூறுகிறது.

இந்த மாதம் வட பகுதி நகரான மோசுலில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில், அபு கஸ்வரா என்று அறியப்பட்டவரும், மொரோக்கோ வம்சாவளியராக கருதப்பட்டவருமான இவர் இறந்ததாக , அமெரிக்க ராணுவம் கூறியது.

அல் கயீதா தலைமையிடம் என்று அமெரிக்காவுக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவரால் வர்ணிக்கப்பட்ட இடம் ஒன்றை படைகள் தாக்கியபோது கொல்லப்பட்ட ஐவர்களில் அபு கஸ்வராவும் ஒருவர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அபு கஸ்வரா ஒரு கவர்ச்சி மிகுந்த தலைவர் என்று வர்ணித்த அந்த அதிகாரி, அவரது மரணம் அல் கயீதா அமைப்பில் ஒரு பெரும் சீர்குலைவை ஏற்படுத்தும் என்றார்.

கருத்துகள் இல்லை: