வன்னிக் களமுனையில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது 8 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 38 படையினர் காயமடைந்துள்ளனர் என சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை வன்னேரிக்குளம், அக்கராயன் பகுதியில் இடம்பெற்ற மோதலகளில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 36 படையினர் காயமடைந்துள்ளனர்.
இதேபோன்று மணலாறு ஆண்டான்குளம், தண்ணிமுறிப்புக் குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் படைத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என சிறீலங்கா படையினர் தெரிவித்துள்ளனர்.
வியாழன், 16 அக்டோபர், 2008
வன்னிக் களமுனையில் 8 சிறீலங்காப் படையினர் பலி! 38 படையினர் காயம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக