திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாதலிக்குல் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். |
இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கந்தளாய் பிரதேசத்துக்குட்பட்ட சேரநாவ பகுதியில் சிறிலங்கா படையினரும் ஊர்காவல் படையினரும் சேர்ந்து அமைத்திருந்த காவலரண் மீது நேற்று திங்கட்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் காவலரண் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி - 01, அதற்குரிய ரவைகள் - 30, சொட்கண் - 01 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காவலரணானது அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. |
செவ்வாய், 30 செப்டம்பர், 2008
கந்தளாயில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தாக்குதல்: நால்வர் பலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக