திங்கள், 29 செப்டம்பர், 2008

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் இளைஞரின் சடலம் மீட்பு


திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் இருந்து இனம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலத்தை கோப்பாய் பொலிசார் பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில மீட்டுள்ளார்கள் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சடலம் திருநெல்வேலியில் உள்ள கை ஒழுங்கையில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்ட்டுள்ளது.

கட்டைக் காற்சட்டையும் ரீசேட்டும் அணிந்த காணப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட சடலம் சுமார் 25 க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவருடையதாக காணப்படலாம் எனவும் இவர் ஒரு பெயின்ரராக இருக்க முடியும் எனவும் சடலத்தில் காணப்பட்ட உடைகளில் காணப்படும் பெயின்ரின் மூலம் ஊகிக்கப்படுகின்றது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.இவர் வேறு இடத்தில் சுடப்பட்டுக் கொண்டு வந்து பொடப்பட்டரரா அன்றி சத்தம் கெட்க்காத முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டரா என்பதையும் அறிய முடியவில்லை.

கருத்துகள் இல்லை: