வெள்ளி, 20 மார்ச், 2009

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் கடும் சமர்


புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்மித்த பகுதிகள், புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதி,

மற்றும் இரணைப்பாலைச் சந்தியில் இடம்பெற்ற மோதல்களிலேயே 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தின் கவச வாகணம் ஒன்றும் தாக்கியழிப்பு.

பல இராணுவத்தினரது உடலங்களை புலிகள் கைப்பற்றி இருப்பதாகவும் அறியப்படுகிறது. இராணுவத்தின் வலிந்த தாக்குதலை எதிர்கொண்டு கடும் முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருக்கும் புலிகள், குழுக்களாக பிரிந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவியுள்ளதால், இராணுவத்தினர் பல அதிர்சி தாக்குதலுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஸ்வமடுவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கையில், புதுக்குடியிருப்பில் இருந்து சுமார் 3 கி.லோ மீட்டர் தொலைவில் சமர் இடம் பெறுவதாக தெரிவித்தனர்.

நாளாந்தம் பல நூற்றுக்கண்கான படையினர் வன்னிக் களமுனையில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். படையினருக்கு ஏற்பட்டு வரும் ஆளணி இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் பலர் மாறி மாறி படையணிகளுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தென்னிலங்கையிலிருந்து ஊர்காவல் படையினரை வவுனியாவுக்கு வருவித்து, வவுனியாவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரை புதுக்குடியிருப்பு பகுதிக் களமுனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வன்னியில் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்கள்! இன்று மட்டும் 8 தடவைகள் குண்டு வீச்சு! சிறீலங்கா வான்படையினர் அண்மைய நாட்களாக மூர்க்கத்தனமாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இன்று வியாழக்கிழமை இச் செய்தி எழுதும் வரைக்கும் சிறீலங்கா வான் படைக்குச் சொந்தமான மிகையொலி விமானங்கள் எட்டுத் தடவைகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் நாளுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு மகிந்த அரசாங்கத்திடம் இந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சி வலியுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை: