இச்சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பிலிருந்து மேலதிக மருத்துவர் குழு ஹெலிகப்டர் மூலம் மாத்தறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் அமைச்சர் மஹிந்த விஜயசேகர உள்ளடங்குவதாகவும் காயமடைந்த அமைச்சர் மஹிந்த விஜேசேகரவை, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, மஹிந்த விஜயசேகர, அமீர் அலி. பண்டு பண்டாரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தற்கொலை தாக்குதலையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக